நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கடிதம்!

 

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கடிதம்!

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகம்உள்பட நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால் தமிழகத்திலோ அழுகையும், போராட்டமுமாக காட்சி அளித்தது. காரணம் நீட் தேர்வு அச்சத்தால் ஒரேநாளில் தமிழகத்தை சேர்ந்த 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தான். இதுகுறித்து நடிகர் சூர்யா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில், “நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போல அவலம் எதுவும் இல்லை.கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில் கூட மாணவர்கள் தேர்வு எழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க வேண்டிய நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கடிதம்!

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மக்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அசத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சம் இல்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று ஆவேசத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். நடிகர் சூர்யாவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளத்தில் ஆதரவு பெருகியது.

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கடிதம்!

இந்நிலையில் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார். உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.