10 ரூபாய் மருத்துவர் சு.கோபாலன், இயற்கை எய்தினார்!

 

10 ரூபாய் மருத்துவர் சு.கோபாலன், இயற்கை எய்தினார்!

சென்னை

சென்னையில் ஏழை, எளிய மக்களுக்கு 10 ரூபாயில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சு.கோபாலன் நேற்றிரவு காலமானார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் மருத்துவர் சு.கோபாலன். 76 வயதான இவர் சென்னை தண்டையாடையார்பேட்டையில் உள்ள பாலு முதலி தெருவில் 10 ரூபாயில் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

10 ரூபாய் மருத்துவர் சு.கோபாலன், இயற்கை எய்தினார்!

அத்துடன், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு கட்டணமின்றி இலவசமாக சிகிகிச்சை அளித்து வந்தார். இதனால், அந்த பகுதி மக்களால் 10 ரூபாய் மருத்துவர் என அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார். முதிய வயதிலும் பொதுமக்களுக்கு பல்வேறு சமூக பணிகளை செய்து சேவையாற்றிய அவருக்கு பல்வேறு அமைப்புகள் விருது வழங்கி கௌரவம் செய்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மருத்துவர் சு. கோபாலான் நேற்றிரவு காலமானார். அவரது மறைவு உறவினர்கள் மற்றும் தண்டையார்பேட்டை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.