கொரோனா விதிமீறல்; இதுவரை 3.48 கோடி அபராதம் வசூல் – சென்னை மாநகராட்சி

 

கொரோனா விதிமீறல்; இதுவரை 3.48 கோடி அபராதம் வசூல் – சென்னை மாநகராட்சி

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்ததால் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கட்டாயம் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாத மக்களோ, போதிய விழுப்புணர்வு இல்லாமல் மாஸ்க் போடாமல் சுற்றித் திரிகின்றனர். பல நாட்களுக்கு பிறகு இயக்கப்பட்டு வரும் பேருந்துகளில் கூட தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என புகார்கள் எழுகிறது. இவ்வாறு இருக்கும் சூழலில் மக்களிடம் கொரோனாவின் தீவிரத்தை உணரவைக்க சென்னை மாநகராட்சி அபராதம் விதித்தது.

கொரோனா விதிமீறல்; இதுவரை 3.48 கோடி அபராதம் வசூல் – சென்னை மாநகராட்சி

அதன் படி, சென்னையில் ஆங்காங்கே சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள் மாஸ்க் அணியாத, தனிமனித இடைவெளி பின்பற்றாத நபர்களிடம் இருந்து அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் பொதுமுடக்க விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை நாட்களில் ரூ.3.48 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.