சென்னையில் புதிய விதி அமல்!- ரேஷன் கடைக்கு போகும் முன் முதலில் இதைப் படியுங்கள்

 

சென்னையில் புதிய விதி அமல்!- ரேஷன் கடைக்கு போகும் முன் முதலில் இதைப் படியுங்கள்

ரேஷன் கடைகள், வங்கிகளுக்கு போகும் மக்களுக்கும், தொழிற்சாலை நிறுவனங்களுக்கும் சென்னை மாநகராட்சி கடும் விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

சென்னையில் புதிய விதி அமல்!- ரேஷன் கடைக்கு போகும் முன் முதலில் இதைப் படியுங்கள்

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாநகராட்சி கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்னதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்கள், இதைப்பற்றி சிறிதும் கொண்டு கொள்ளாமல் மெத்தனமாகவே செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், எச்சரிக்கையுடன் சென்னை மாநகராட்சி சில விதிகளைப் பட்டியலிட்டுள்ளது.

ரேஷன் கடைகளில், 2000 கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரிக்க வேண்டும். மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டும். டோக்கனில் குறிப்பிட்டு உள்ள நாள், நேரத்தில் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும். பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என எச்சரிக்கை வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்களுக்கும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், ” கட்டுமான நிறுவனங்கள், தொழிற்சாலையில் உள்ளிட்ட இடங்களில் தனிமனித இடைவெளி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். அனைத்து பணியாளர்களும் முகக்கவசம், கையுறை, முகக்கவச கண்ணாடி அணிய வேண்டும். தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் கூட்டங்கள் நடத்தி தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் புதிய விதி அமல்!- ரேஷன் கடைக்கு போகும் முன் முதலில் இதைப் படியுங்கள்

வங்கிகளில் செய்ய வேண்டிய விதிமுறைகளில், “வங்கியினுள் வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். டோக்கன் முறை, சரியாக பின்பற்றப் பட வேண்டும். வங்கியினுள் ஒரு நேரத்தில் 5 வாடிக்கையாளர்களுக்கு மேல் இருக்க கூடாது.
பாஸ் புக் பதிவு, குறைந்த அளவிலான பண பரிவர்த்தனை உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்க கூடாது. ஏ டி எம் மையங்களில் தேவையான பணத்தை நிரப்பி, மக்கள் வங்கிகளுக்கு கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.ஒவ்வொரு ஏ டி எம் மையமும் ஒரு நாளைக்கு 5 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று பணத்தை வழங்க வேண்டும்.

சென்னையில் புதிய விதி அமல்!- ரேஷன் கடைக்கு போகும் முன் முதலில் இதைப் படியுங்கள்

வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அணியாதவர்கள் பண பரிவர்த்தனை செய்ய அனுமதிக்க கூடாது. மேலும், மாநகராட்சியின் கண்காணிப்பு குழுவினர் மூலம் இந்த நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். உத்தரவுகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் நபர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது சென்னை மாநகராட்சி.