ரஜினிகாந்த் உரிய அனுமதியோடுதான் கேளம்பாக்கம் சென்றார்- மாநகராட்சி ஆணையர்

 

ரஜினிகாந்த் உரிய அனுமதியோடுதான் கேளம்பாக்கம் சென்றார்- மாநகராட்சி ஆணையர்

தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரு மாவட்டத்தை விட்டு இன்னொரு மாவட்டம் செல்ல அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்த படி கார் ஓட்டிக்கொண்டு கேளம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய பங்களாவுக்கு சென்றது தொடர்பான படம் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. சென்னை மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உரிய அனுமதியோடு ரஜினிகாந்த் சென்றாரா என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரஜினிகாந்த் உரிய அனுமதியோடுதான் கேளம்பாக்கம் சென்றார்- மாநகராட்சி ஆணையர்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “ரஜினிகாந்த் உரிய முறையில் இ-பாஸ் பெற்று கேளம்பாக்கம் சென்றுள்ளார். எந்த மாவட்டத்தில் வருகிறதோ, அந்த மாவட்ட அலுவலர் தான் இ-பாஸ் கொடுக்க வேண்டு. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அவர் இ பாஸ் பெற்றுகொண்டு கேளம்பாக்கத்திற்கு சென்று வந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது” என தெரிவித்தார்.