சென்னையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: மண்டலவாரி விவரம் வெளியீடு

 

சென்னையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: மண்டலவாரி விவரம் வெளியீடு

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. அதனால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.

சென்னையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: மண்டலவாரி விவரம் வெளியீடு

இந்த நிலையில் இன்றைய மண்டலவாரி கொரோனா விவரத்தைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் கொரோனா உறுதியான 83,377 பேரில் 14,923 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 1,376 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் ஆண்கள் 58.34 சதவீதம் மற்றும் 41.66 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 67,077 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: மண்டலவாரி விவரம் வெளியீடு