ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 5626 ஆக உயர்வு.. மண்டலவாரி பட்டியல் வெளியீடு!

 

ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 5626 ஆக உயர்வு.. மண்டலவாரி பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் தான் அதிக அளவு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதனால் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. அதனால் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த மைக்ரோ ப்ளான் என்ற பெயரில் 9 திட்டங்களை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை பாதிப்பின் மண்டலவாரி விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 5626 ஆக உயர்வு.. மண்டலவாரி பட்டியல் வெளியீடு!

இந்த நிலையில் சென்னை கொரோனா பாதிப்பின் மண்டலவாரி விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 5626 பேரும் , தண்டையார்பேட்டையில் 4549 பேரும் , திரு.வி.க நகரில் 3160 பேரும் , அண்ணா நகரில் 3636 பேரும் தேனாம்பேட்டையில் 4334 பேரும் , கோடம்பாக்கத்தில் 3801 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக 35,556 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.