சென்னையில் அதிகரிக்கும் உயிர்பலி : ஒரே நாளில் கொரோனா தொற்றால் 16 பேர் உயிரிழப்பு!

 

சென்னையில் அதிகரிக்கும் உயிர்பலி : ஒரே நாளில் கொரோனா தொற்றால்  16 பேர்  உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,993பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

சென்னையில் அதிகரிக்கும் உயிர்பலி : ஒரே நாளில் கொரோனா தொற்றால்  16 பேர்  உயிரிழப்பு!

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 95,857 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகரிக்கும் உயிர்பலி : ஒரே நாளில் கொரோனா தொற்றால்  16 பேர்  உயிரிழப்பு!

இந்நிலையில் சென்னையில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் இதுவரை 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றால் ராஜீவ் காந்தி -9 , ஓமந்தூரார் -2 , ஸ்டான்லி -4 , தனியார் மருத்துவமனையில் -1 என மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.