சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு

 

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு

சென்னை

சென்னை பாடி திருவல்லீஸ்வரர் நகர் காந்தி சாலையில் இன்று காலை திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பாடி மகாத்மா காந்தி சாலையில் சமீபத்தில் 4 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு

அதனை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக சரிசெய்யாமல் மெத்தன போக்கில் பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை அதே இடத்தில் சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் தவிப்புக்கு உள்ளாகினர். இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.