செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 246 பேருக்கு கொரோனா உறுதி!

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 246 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 4,538 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டுமே 83,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் கொரோனா பாதித்தவர்களில் தற்போது 14,923 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் பாதித்து குறைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது. இதனிடையே சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 246 பேருக்கு கொரோனா உறுதி!

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தின் பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 246 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கை 9,281 ஆக உயர்ந்துள்ளது. மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 6,763 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 2,085 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.