செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3085 ஆக உயர்வு!

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3085 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 25,344 பேர் குணமடைந்து விட்டதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆக 33,244 உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டுமே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 382 ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3085 ஆக உயர்வு!

சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3085 ஆக அதிகரித்துள்ளது. அம்மாவட்டத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 27 பேர் உயிரிழந்த நிலையில், அதிகபட்சமாக பல்லாவரம் மற்றும் தாம்பரம் நகராட்சிகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், செங்கல்பட்டில் அதிகமாக பல்லாவரம் நகராட்சியில் தான் 327 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.