வெள்ளிக்கிழமைகளில் துர்கை அம்மனின் அருள் வேண்டி சொல்ல வேண்டிய மந்திரம்!

 

வெள்ளிக்கிழமைகளில் துர்கை அம்மனின் அருள் வேண்டி சொல்ல வேண்டிய மந்திரம்!

இந்து மத நம்பிக்கை கொண்டவர்கள் வெள்ளிக் கிழமைகளில் சக்தி தேவியை நினைத்து பூஜை செய்வது வழக்கம். பார்வதி தேவி பல வடிவங்களில் இருந்தாலும் எந்த ஒரு வடிவத்தை நினைத்து வணங்கினாலும் பார்வதியின் அருள் நிச்சயம் உண்டு.

வெள்ளிக்கிழமைகளில் துர்கை அம்மனின் அருள் வேண்டி சொல்ல வேண்டிய மந்திரம்!

அம்மனை நினைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி சொல்லி வந்தால் பல விதமான நன்மைகள் உங்களை வந்து சேரும்.

ஸர்வ சொரூபே ஸர்வே ஸே

ஸர்வ சக்தி ஸமன் விதே

பயேப்ய ஸ்தாகினோ தேவி

துர்க்கே தேவி நமோஸ்துதே

விளக்கம்:

சர்வவல்லமையுள்ள துர்கையே உம்மை வணங்குகிறேன். எல்லாவற்றிலும் மிக சக்தி வாய்ந்த அன்னை துர்கா தேவியே நான் உன்னை வணங்கும்போது என் எல்லா அச்சங்களையும் நீ நீக்குகிறாய்!

இந்த ஸ்லோகத்தை வெள்ளிக்கிழமைகளில் மட்டுமல்ல தினமும் காலை, மாலை இரு வேளையும் சொல்லலாம். இதை சொல்பவர்களுக்குக் கடன் பிரச்னை உள்ளிட்ட எல்லா பிரச்னைகளும், பயம், கவலை போன்றவை நீங்கும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.