சூழலை பொறுத்து தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதல்வர் பழனிசாமி

 

சூழலை பொறுத்து தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதல்வர் பழனிசாமி

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க மக்கள் கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என்பதால், அனைத்து கூட்டங்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவே நடந்து வருகிறது. அதே போல இன்று காலை இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஒளிரும் தமிழ்நாடு என்ற தலைப்பில் நடந்த மாநாட்டை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார். அந்த வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

சூழலை பொறுத்து தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதல்வர் பழனிசாமி

அதில் பேசிய முதல்வர், கொரோனா பாதிப்பின் சூழலை பொறுத்து தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் தொழில்துறை இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 25% பணியாளர்களும் மற்ற பகுதியில் 50% பணியாளர்களும் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.