Sleep mode-க்கு சென்ற பிரக்யான் ரோவர் - அடுத்து என்ன நடக்கும் தெரியுமா?

 
chandrayaan chandrayaan

சந்திரயான் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர் தனது பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு Sleep mode-க்கு சென்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14ம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.  இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி மாலை 6.4 மணியளவில்  நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. அதிலிருந்து பிரிந்து சென்ற ரோவர் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து  நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது.  பள்ளம் போன்ற தடைகள் இருந்தால், தாமாகவே பாதையை மாற்றி பக்குவமாக பயணித்து வருகிறது  ரோவர். நிலவின் தென்பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதை கண்டறிந்துள்ளது. மேலும் நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் உறுதி செய்துள்ளது.  

rover

இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர் தனது பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு Sleep mode-க்கு சென்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் சூரிய வெளிச்சம் மறையவுள்ளதால் பிரக்யான் ரோவரை ஸ்லீப் மோடுக்கு கொண்டு சென்றுள்ளனர். மீண்டும் வருகிற 22ம் தேதி சூரிய வெளிச்சம் கிடைத்ததும் பிரக்யான் ரோவர் கண் விழிக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.