சந்திரயான் - 3 விண்கலத்தை 2-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றி - இஸ்ரோ

 
Chandrayan3 Chandrayan3

சந்திரயான் - 3 விண்கலத்தை 2-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக  சந்திரயான்- 3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது.  ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலம் சரியாக  நேற்று முன் தினம் மதியம் 2.35 மணி 17 வினாடிக்கு  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்  விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து  ஏவப்பட்டது.  விண்ணில் செலுத்தப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் .  7 ஆய்வு கருவிகளை உள்ளடக்கிய சந்திராயன் 3 விண்கலத்தின் மொத்த விடை 3900 கிலோ ஆகும்.  பூமியிலிருந்து 3.84  லட்சம் கிலோ மீட்டரில் உள்ள நிலவை அடைய சந்திரயான் விண்கலத்திற்கு 40 நாட்கள் ஆகும். நிலவில் தரையிரங்கிய பின்னர்  நிலவின் தென் பகுதியில் 14 நாட்கள் மேற்கொள்ளும் வகையில் சந்திரயான்-3  விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்தத் திட்டம் மூலம்  நிலவை ஆய்வு செய்யும் 4வது நாடு என்கிற பெருமையையும், நிலவின் தெந்துருவ பகுதியை ஆய்வு செய்யும் முதல்நாடு என்கிற பெருமையையும் இந்தியா பெருகிறது.  

ISRO Somnath

இந்த நிலையில், சந்திரயான் - 3 விண்கலத்தை 2-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மீண்டும் நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை அடுத்தகட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சியை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. 179 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் - 3 விண்கலம் 226 கி.மீ தொலைகு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் புவியில் இருந்து தற்போது 41,603 கி.மீ x 226 கி.மீ சுற்றுப்பாதையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.