8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

 

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில், 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

இந்த 8 மாவட்டங்களுடன், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 8 செ.மீ, கே. மாத்தூரில் 6 செ.மீ, நெய்வேலி மற்றும் வேப்பூரில் தலா 5 செ.மீ மழை பதிவாகி இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.