தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

 

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன் படி நிசர்கா என்று பெயரிடப்பட்ட இந்த புயலானது, தீவிர புயலாக மாறி மும்பையில் இருந்து தெற்கு தென்மேற்கு திசையில் 215 கிலோ மீட்டர் தொலைவிலும் குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 440 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கு திசையிலும் நிலைகொண்டிருந்தது. வடகிழக்கு திசையில் 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த புயல், மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே கரையை கடந்தது. இந்த புயலால் மேற்கு வங்கத்தில் பல உயிர் சேதங்கள் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்பட்டது.

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

ஆம்பன் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத இந்த நிலையில், தற்போது மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.