தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு!
Sep 23, 2020, 13:20 IST1600847425000
தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது.
மத்திய கிழக்கு, வடகிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி சிவலோகத்தில் 6 செமீ, பெருஞ்சாணியில் 4 செமீ மழைப் பதிவாகியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.