தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழக கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில்மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.