10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்!

வெப்பச்சலனம் காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்!

வெப்ப சலனம் காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், நாமக்கல் ,ஈரோடு ,நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர் ,திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலூர் புதுச்சேரி ,காரைக்கால் ,மயிலாடுதுறை ,நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.,

நாளை ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் ,தேனி ,திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை , தர்மபுரி ,சேலம், நாமக்கல் ,திருப்பூர் ,கரூர் ,திருச்சி ,பெரம்பலூர் ,அரியலூர் ,மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். வருகின்ற 4ஆம் தேதி மற்றும் 5ஆம் தேதிகளில் தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் ,ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்!

வருகின்ற 6ம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ,கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர் ,தர்மபுரி ,கடலூர், புதுவை ,விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.