3 மாவட்டங்களில் நாளை கனமழை : அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

 

3 மாவட்டங்களில் நாளை கனமழை : அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று வட கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அனேகமாக வறண்ட வானிலையே நிலவும்.நாளை நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் மாவட்டங்கள் , சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

3 மாவட்டங்களில் நாளை கனமழை : அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

வருகின்ற 23ஆம் தேதி நீலகிரி, கோவை ,தேனி, மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதேபோல் வருகின்ற 24ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி ,கோவை, திருப்பூர், தேனி ,திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேகமாக வறண்ட வானிலையே நிலவும்.வருகின்ற 25 ஆம் தேதி தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் .நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

3 மாவட்டங்களில் நாளை கனமழை : அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

இன்று முதல் வருகின்ற 25 ஆம் தேதி வரை தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். இதனால் இந்த தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.