3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
Nov 3, 2020, 12:53 IST1604388206000
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புபி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தேனி மஞ்சளாறில் 9 செமீ., நீலகிரி பர்லியாறு பகுதியில் 8 செமீ.,மழை பதிவாகியுள்ளது.வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.