10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு!

 

10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு!

8 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு!

வெப்ப சலனம் மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கிருஷ்ணகிரி ,தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் , ஈரோடு ,திருப்பத்தூர் ,வேலூர் ,ராணிப்பேட்டை, திருவள்ளூர் ,திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு!

அடுத்த நான்கு நாட்களுக்கு, தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் நீலகிரி ,தேனி ,ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 25 ஆம் தேதி தேனி திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.