10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை ,தஞ்சாவூர், திருச்சி ,சேலம் ,நாமக்கல் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தமிழகத்தின் ஒரு சில வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வருகின்ற 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை செய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு பருவமழை இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.