பாறாங்கல்லால் தாக்கி பெண்ணிடம் செயின் பறிப்பு: அதிர்ச்சி சம்பவம்!

 

பாறாங்கல்லால் தாக்கி பெண்ணிடம் செயின் பறிப்பு: அதிர்ச்சி சம்பவம்!

ஸ்ரீகாளஹஸ்தி அருகே கல்லால் தாக்கி பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமகுப்பம் மண்டலம் செல்திகாணிப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணப்பா. இவரது மனைவி ருக்மணியம்மா(45) விவசாய பணி செய்து வருவதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இவர் வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் ருக்மணியம்மாவை பாறாங்கல்லால் தாக்கியுள்ளனர்.

பாறாங்கல்லால் தாக்கி பெண்ணிடம் செயின் பறிப்பு: அதிர்ச்சி சம்பவம்!

இதில் படுகாயம் அடைந்த ருக்மணியம்மா, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார். அந்த கேப்பில், அவர் அணிந்திருந்த செயின்உள்ளிட்ட அனைத்து நகைகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ருக்மணியம்மா மயங்கிக் கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு, தன்னை மர்ம நபர்கள் தாக்கி செயின் உள்ளிட்ட அனைத்தையும் பறித்துச் சென்று விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.