ஊரடங்கில் அதிகரிக்கும் செயின் பறிப்பு : ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் பதற்றம்!
May 27, 2020, 08:27 IST1590548242000
கொரோனா ஊடரங்கை பயன்படுத்தி ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அம்பத்தூர் வெங்கடேஷ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் லலிதா பெண் தனது கணவர் இறந்துவிட்டதால் மகளுடன் வசித்து வருகிறார்.
இவர் வீட்டு வேலை முடித்து கொண்டு மாலை வீடு திரும்பிய போது அம்பத்தூர் ராம்நகர் பகுதியில் நடந்து சென்ற போது பைக்கில் வந்த இருவர் லலிதாவின் செயினை பறித்துக்கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் நேற்று ஆவடி அருகே அன்னனூரில் சாலையில் நடந்து சென்ற மங்கையர்க்கரசி என்ற பெண்ணிடம் தங்க சங்கிலி என நினைத்து கவரிங் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.