அரசுக்கு எதிராக செய்தியா போடூறிங்க… பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ரூ.84 கோடி அபராதம்
Jul 13, 2020, 18:40 IST1594645833000
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு, 84 கோடி ரூபாய் அபராதம் விதித்து, மத்திய வீட்டுவசதி அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லியில் நாடாளுமன்ற வீதியில் பிடிஐ செய்தி நிறுவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த இடத்தை பயன்படுத்தும் விதிகளை அந்நிறுவனம் மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு இத்தகைய அபராதத்தை மத்திய வீட்டுவசதி அமைச்சகம் விதித்துள்ளது.
ஜூலை 14 ஆம் தேதிக்குள் அபராத தொகையை செலுத்த வேண்டும் என்றும், மீறினால், கூடுதலாக 10 சதவீதம் வட்டி விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்திவிட்டு விதிகளை மீறமாட்டோம் என முத்திரைத்தாளில் உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும் உத்த்ரவிட்டுள்ளது. பிடிஐ நிறுவனம் அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வருவதாக, அண்மையில் பிரசார் பாரதி தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.