மத்தியக் குழு இன்று மாலை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை!

 

மத்தியக் குழு இன்று மாலை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்த படியாகத் தமிழகம் இருக்கிறது. இதனால் தமிழகத்தில் ஏற்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான மத்தியக் குழு 3 ஆவது முறையாக இன்று தமிழகம் வந்தது. அந்த குழுவில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு உட்பட 7 பேர் இடம் பெற்றிருந்தனர்.

மத்தியக் குழு இன்று மாலை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை!

இன்று காலை செங்கல்பட்டு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்ட இந்த குழு நாளை வரை சென்னையில் தங்கி இருந்து பல மருத்துவமனைகள் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளை நேரில் பார்வையிடவிருக்கிறது. இந்த குழு காலை 9 மணியிலிருந்து 11.30 மணி வரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கருடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்து தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகின்றனர்.