45 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்- மத்திய அரசு

 

45 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்- மத்திய அரசு

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அரசு புது விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

மதுரையில் பிரதமர் மோடி கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டினார். ஆனால் இதுநாள் வரை அங்கு எந்த பணியும் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மதுரை எயம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்படாததற்கு எல்லோரும் பா.ஜ.க-வை கை காட்ட, பா.ஜ.கவோ தமிழக அரசை நோக்கி கையை நீட்டியது. தமிழக அரசு நிலம் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமின்றி ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் எட்டப்படவில்லை எனவும் தெரிவித்தது.

45 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்- மத்திய அரசு

இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 200 ஏக்கர் நிலத்தை ஏற்கனவே மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், மத்திய அரசு கூடுதலாக கேட்ட 22 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுவிட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில் எய்ம்ஸ் அமைக்க ஜப்பான் நிறுவனத்திடம் கடன்பெறுவது, ஒப்பந்தம் தொடர்பான பணி நடைபெற்றுவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஒப்பந்தப் பணிகள் நிறைவடையும். அதன்பின் 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.