முதியவரிடம் கத்தி முனையில் செல்போன் பறிப்பு – 3 பேர் கைது

 

முதியவரிடம் கத்தி முனையில் செல்போன் பறிப்பு – 3 பேர் கைது

ஈரோட்டில் முதியவரிடம் கத்திமுனையில் செல்போன் பறித்துக் கொண்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர். ஈரோடு கோட்டை முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் நடராஜன் (58). இவர் அகில்மேடு பகுதியில் உள்ள ஷேர்ஆட்டோ நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த மூவர், கத்தியை காட்டி மிரட்டி விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் மட்டும் 2 ஆயிரம் ரூபாய் பணத்தை பிறித்துள்ளனர்.

முதியவரிடம் கத்தி முனையில் செல்போன் பறிப்பு – 3 பேர் கைது

மேலும், அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த நடராஜனை அப்பகுதி மக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஈரோடு டவுன் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட பள்ளிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (22), கருங்கல்பாளையத்தை சேர்ந்த கார்த்தி(21) மற்றும் சேலத்தை சேர்ந்த ஸ்னேக் ரவி(20) ஆகியோரை கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

முதியவரிடம் கத்தி முனையில் செல்போன் பறிப்பு – 3 பேர் கைது