இரவில் செல்போனுக்கு சார்ஜர்… பற்றி எரிந்த வீடு… பறிபோன 3 பேரின் உயிர்கள்!- கரூரில் சோகம்

 

இரவில் செல்போனுக்கு சார்ஜர்… பற்றி எரிந்த வீடு… பறிபோன 3 பேரின் உயிர்கள்!- கரூரில் சோகம்

செல்போன் வெடித்து தீப்பிடித்ததால் தாய், இரண்டு மகன்கள் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் கரூரில் நடந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடம்பனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் தனது 3 வயது மகன்களான இரட்டையர்கள் ரட்சித், தட்சித் ஆகியோருடன் கடந்த சில ஆண்டுகளாக கரூர் ராயனூர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை முத்துலட்சுமியில் வீட்டில் தீ பற்றி எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, முத்துலட்சுமி உடல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். அவரது 3 வயது மகனான ரஞ்சித்தும், 2 வயது மகனான தட்சித்தும், படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் முத்துலட்சுமி இரவில் சார்ஜ் போட்டிருந்த செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. அதேசமயம், கணவரை பிரிந்து வாழும் முத்துலட்சுமி, தனது பெற்றோரை ஊருக்கு அனுப்பி இருந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.