சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

 

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியதன் பேரில், பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கிவிட்டன. ஆனால், அரசுப் பள்ளிகளில் இதுவரை ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படவில்லை. இதனிடையே மாணவர்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. மேலும், கொரோனாவால் நிலவி வரும் இந்த இக்கட்டான சூழலில் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் கல்வி ஆண்டு, இந்த வருடம் ஜூலை ஆகியும் இன்னும் தொடங்கப்படவில்லை. கொரோனா வைரஸ் தாக்கம் ஓரளவு குறைந்த பிறகே மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிகள் திறந்த பின்னர் மாணவர்கள் குறைந்த காலத்தில் முழுமையான பாடத்திட்டத்தை படிக்க முடியாது என்பதால் பாடத்திட்டத்தை குறைக்க வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வியாளர்களின் ஆலோசனைப்படி பாடத்திட்டங்களை குறைக்க முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.