மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்றாலும் தேர்ச்சி – சிபிஎஸ்இ

 

மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்றாலும் தேர்ச்சி – சிபிஎஸ்இ

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அதே போல சி.பி.எஸ்.சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டன. சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில், தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படவில்லை. கடந்த 18 ஆம் தேதி, சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணையை சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டார். அந்தந்த பள்ளிகளிலேயே 10 மற்றும் 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்கள் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்றாலும் தேர்ச்சி – சிபிஎஸ்இ

இந்நிலையில் ஜூலை 1 முதல் 15 வரை நடைபெறும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வை, மாற்றுத்திறன் உடைய மாணவர்களால் எழுத முடியாமல் போனால், அவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. வேறு மாவட்டங்களில் தங்கியுள்ள மாணவர்கள் தங்களின் தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ளவும் சிபிஎஸ்இ அனுமதி வழங்கியுள்ளது. மாணவர்கள் தங்களின் பள்ளிகளிலேயே தேர்வு எழுதவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.