“துப்பாக்கி முனையில் மிரட்டும் சிபிசிஐடி போலீசார்…காசியை கொன்று விடுவார்கள் என்று பயமாக உள்ளது” : காசியின் சகோதரி குற்றச்சாட்டு!

 

“துப்பாக்கி முனையில் மிரட்டும் சிபிசிஐடி போலீசார்…காசியை கொன்று விடுவார்கள் என்று பயமாக உள்ளது” : காசியின் சகோதரி குற்றச்சாட்டு!

நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் காசி(26), சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களுடன் பழகி, ஆபாசப் படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறித்து வந்தார். இவரைப் பற்றி சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில், காசி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போலப் பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களைக் காட்டி அவர்களது அம்மாக்களையும் அடிபணிய வைத்திருக்கிறார் என்பது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீது குண்டர் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

“துப்பாக்கி முனையில் மிரட்டும் சிபிசிஐடி போலீசார்…காசியை கொன்று விடுவார்கள் என்று பயமாக உள்ளது” : காசியின் சகோதரி குற்றச்சாட்டு!

காசியிடம் நடத்திய விசாரணையில் அவரது கூட்டாளி டேசன் ஜினோ என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கௌதம் என்பவர் வெளிநாட்டில் இருப்பதால் அவர் வெளிநாட்டில் இருந்து வரும் போது கைது செய்வதற்கு விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

“துப்பாக்கி முனையில் மிரட்டும் சிபிசிஐடி போலீசார்…காசியை கொன்று விடுவார்கள் என்று பயமாக உள்ளது” : காசியின் சகோதரி குற்றச்சாட்டு!

சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் தலைமையில் போலீசார் காசி வழக்கை விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காசியையும் அவனது கூட்டாளி டேசன் ஜினோ வையும் 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் காசி, அவரது நண்பர் தினேஷ் என்பவர் குறித்து முக்கிய தகவல்களை கூறியுள்ளார். காசி ஏமாற்றிய பெண்களை மிரட்டுவதற்காக அவர்களது ஆபாச படங்களை தினேஷுக்கு கொடுத்துள்ள நிலையில் தினேஷ் அந்த படங்களை பயன்படுத்தி காசி ஏமாற்றிய பெண்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து பணத்தையும் பறித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவலை காசி கூறியதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் சில பெண்களிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நாகர்கோவில் கணேச புரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், காசியின் வீட்டிற்குச் சென்ற சிபிசிஐடி போலீசார் அவரது தாய் பத்மாவதியை தாக்கியதாகவும் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும் காசியின் சகோதரி அன்னசுதா குற்றம் சாட்டியுள்ளார்.

“துப்பாக்கி முனையில் மிரட்டும் சிபிசிஐடி போலீசார்…காசியை கொன்று விடுவார்கள் என்று பயமாக உள்ளது” : காசியின் சகோதரி குற்றச்சாட்டு!

இதுகுறித்து கூறியுள்ள அவர், “எனது தந்தைக்கு கொரோனா அறிகுறி இருந்தது. அதனால் அவரை நாங்கள் தனிமைப்படுத்தி வைத்தோம்। ஆனாலும் காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அத்துடன் என்னுடைய தாயின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வீசிய சிபிசிஐடி போலீசார் அவரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டினர். சாத்தான்குளத்தில் இருவர் கொலை செய்யப்பட்டது போல் உனது மகனுக்கும் கணவருக்கும் நடக்கும் என்று அவர்கள் மிரட்டினார்கள். அப்போது எனது தாய் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். நாங்கள் அவரை மருத்துவமனையில் கொண்டுசென்று சேர்த்தோம். ஆனால் சிபிசிஐடி போலீசார் கொடுக்கும் அழுத்தத்தால் எங்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியில் விடவில்லை. இதனால் நாங்கள் வேறு வழியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக எனது தாயாரை அனுமதித்தோம். போலீசார் மிரட்டுவதை பார்த்தால் எனது தந்தையையும், சகோதரனையும் கொன்றுவிடுவார்கள் என்று பயமாக உள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் சிபிசிஐடி போலீசார் அதிக இடையூறு செய்கிறார்கள். இதனால் அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை ‘ என்று கூறியுள்ளார்.