கேரளாவின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக சிபி ராதா கிருஷ்ணன் நியமனம்

 

கேரளாவின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக சிபி ராதா கிருஷ்ணன் நியமனம்

தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு கேரளாவின் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய கட்சிகளின் ஆதிக்கம் முடிந்து போய் பல ஆண்டுகளாகிவிட்டது. அதற்குப் பிறகு காங்கிரஸும் சரி, பாஜகவும் சரி என்னென்னவோ செய்து பார்த்தும் கூட மேலெழுந்து வர முடியவில்லை. ஆதிக்கத்தை மீண்டும் பெறும் முயற்சிகளை காங்கிரஸ் கைவிட்டு பல காலமாகி விட்டது. ஆனால் பாஜக அப்படி இல்லை. தமிழகம் மற்றும் கேரளாவில் ஆட்சியை பிடிக்க போராடிவருகிறது.

கேரளாவின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக சிபி ராதா கிருஷ்ணன் நியமனம்

அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு கேரளாவின் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியை கட்சி தலைமை வழங்கியுள்ளது. 1957 ஆம் ஆண்டு பிறந்த சிபி ராதாகிருஷ்ணன் கோயம்புத்தூர் தொகுதியில் இருந்து இரண்டு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜகவின் முன்னாள் மாநில தலைவரான இவர், ஆர்.எஸ்.எஸ்- அமைப்பில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறார்.