மருந்துகளால் பக்கவிளைவு, எச்சரிக்கை தேவை!

 

மருந்துகளால் பக்கவிளைவு, எச்சரிக்கை தேவை!

பக்கவிளைவு… நாம் உட்கொள்ளும் மருந்துகள் நமக்கு பக்கவிளைவு ஏற்படுத்துமா? என்பது தெரியாமலே நம்மில் பலர் காலகாலமாக உட்கொண்டிருக்கிறோம். சாதாரண சளி, காய்ச்சலில் தொடங்கி நீடித்த புற்றுநோய் வரை பாதிப்புக்குள்ளாக்கும்போது அவற்றிலிருந்து விடுபட ஏதேதோ மருந்துகளை உட்கொள்கிறோம். ஆனால், அந்த மருந்துகள் ஒருநாள் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுபற்றி நமக்குத் தெரிவதில்லை.

மருந்துகளால் பக்கவிளைவு, எச்சரிக்கை தேவை!
ஸ்டீராய்டு:
நோயிலிருந்து குணம்பெற வேண்டும், இப்போதைக்கு அதிலிருந்து நிவாரணம் பெற வேண்டும் என்பதற்காக எந்த மருத்துவர் கொடுக்கும் மருந்துகளையும் கேள்விகள் எதுவும் கேட்காமல் உட்கொண்டிருக்கிறோம். என்றைக்காவது இந்த மருந்தில் என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளன, டோஸேஜ் அளவு என்ன, தயாரிக்கும் கம்பெனியின் பெயர் என்ன என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. ஸ்டீராய்டு சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று யாராவது கேட்டிருப்போமா?

ஆன்டிபயாடிக் மருந்துகளில் பல நோயைத் தீர்க்கலாம்; ஆனால், என்றோ ஒருநாள் பல்வேறு இன்னல்களை தரப்போகின்றன என்பதை அறியாமலே அவற்றை உட்கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த மருந்துகளை கொடுக்கும் மருத்துவர்களுக்கும் மருந்து விற்பனை செய்பவர்களுக்கும் அவற்றிலுள்ள பக்கவிளைவுகள் பற்றி தெரிந்தும் அவற்றை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அது அவர்களது தொழில்.

மருந்துகளால் பக்கவிளைவு, எச்சரிக்கை தேவை!ஆன்டிபயாடிக்:
மருந்துகள் விஷயத்தில் மருத்துவர்கள் மற்றும் பார்மசிஸ்ட்டுகளை மட்டுமே குறை சொல்லி பலனில்லை. நம்மில் பலர் நோயிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்பதற்காக பவர்ஃபுல் மருந்துகளை கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள். டீக்கடைகளில் `டிகாஷன், சர்க்கரை தூக்கலா போடுப்பா’ என்று சொல்வதைப்போல `ஒரே ஊசியில காய்ச்சல் சரியாகுற மாதிரி ஊசி போடுங்க டாக்டர்’ என்று சொல்லும் பலரைப் பார்க்க முடிகிறது. அறிந்தும் செய்கிறார்கள், பலர் அறியாமலும் செய்கிறார்கள்.

50 சதவீத ஆன்டிபயாடிக் மருந்துகளை பல மருத்துவர்களும், நோயாளிகளும் அளவுக்கு மீறி பயன்படுத்துகின்றனர். பலர் தேவையில்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர் என்று இந்திய பொது சுகாதாரத்துறையே எச்சரித்துள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பல தங்களது விற்பனையைக் கூட்டுவதற்காக போட்டி போட்டுக்கொண்டு ஆன்டிபயாடிக் மருந்துகளை விற்பனை செய்வதில் மும்முரம் காட்டுகின்றன. காரணம் அதில் பணப்புழக்கம் அதிகம்.

மருந்துகளால் பக்கவிளைவு, எச்சரிக்கை தேவை!கவனம் தேவை:
இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு மருந்துகள் உட்கொள்ளும் விஷயத்தில் நாம் அனைவரும் அக்கறை காட்ட வேண்டும். மருத்துவர்தானே கொடுக்கிறார், நோயைத் தீர்க்கத்தானே மருந்து, மாத்திரை தருகிறார் என்பதற்காக கண்களையும், வாய்களையும் மூடிக்கொண்டு மருந்துகள் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்துவோம். அதிலும் குறிப்பாக ஆன்டிபயாடிக் மருந்துகள் விஷயத்தில் அதிக கவனம் தேவை.