கேஸ் டேங்கர் லாரி மீது மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

 

கேஸ் டேங்கர் லாரி மீது மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

வேலூர் மாவட்டம் துரிஞ்சிதலைப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் . 35 வயதான இவர் பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வசித்து வந்த நிலையில் அங்கு வெல்டிங் பட்டறை ஒன்றை நடத்தி வந்தார். இந்த சூழலில் ரமேஷ் தனது குடும்பத்தினருடன் ஆம்னி வேனில் குடியாத்தம் சென்ற நிலையில் மீண்டும் பெங்களூரு திரும்பி கொண்டிருந்தார்.

கேஸ் டேங்கர் லாரி மீது மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

நேற்று மதியம் சென்னை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுண்டம்பட்டி அருகே ஆம்னி வேன் கொண்டிருந்த நிலையில் வேன் கட்டுப்பாட்டை இழந்தது.வேனை ரமேஷ் ஓட்டி வந்த நிலையில், அங்கு நின்று கொண்டிருந்த கேஸ் டேங்கர் லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரமேஷ், அவரது மனைவி தீபா, ஒட்டு வயது குழந்தை நித்தீஷ், உறவினர் அஞ்சலி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கேஸ் டேங்கர் லாரி மீது மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

அத்துடன் படுகாயங்களுடன் சரளா மற்றும் சிறுமிகள் சாரிகா, ஓவியா ஆகிய 3 பேர் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி சரளா பரிதாபமாக இறந்தார். இந்த கோர விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.