பிரச்சாரத்தில் பெண்களின் இடுப்பை பற்றி பேசிய லியோனி மீது போலீசில் புகார்!

 

பிரச்சாரத்தில் பெண்களின் இடுப்பை பற்றி பேசிய லியோனி மீது போலீசில் புகார்!

சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு தீவிர பிரச்சாரம் செய்து வரும் லியோனி, தொண்டாமுத்தூர்தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “நாட்டுப்பாலை குடித்து வளர்ந்த அந்த காலத்து பெண்களோட இடுப்பு 8 மாதிரி இருக்கும். குழந்தைகளை தூக்கி இடுப்புல வச்சா அப்படியே உட்கார்ந்து கொள்ளும், ஆனால் இப்போது வெளிநாட்டு மாட்டு பாலை குடித்து குடித்து நம்ம ஊர் பெண்கள் பலூன் மாதிரி ஊதிப்போய்ட்டாங்க. இப்போது பெண்கள் இடுப்பு பேரல் மாதிரி பெருத்துக்கிடக்கிறது. பிள்ளையை தூக்கி வச்சா வழுக்கிக்கொண்டு ஓடுகிறது” என நக்கலடித்தார்.

பிரச்சாரத்தில் பெண்களின் இடுப்பை பற்றி பேசிய லியோனி மீது போலீசில் புகார்!

இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் பிரச்சாரத்தின் போது பெண்கள் குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் வழக்கறிஞர் சுபாஷினி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.