ஆபாசப்பேச்சு.. திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!

 

ஆபாசப்பேச்சு.. திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!

தமிழகமே எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த அந்த நாள் வரப்போகிறது. ஆட்சி மாற்றம் நடக்குமா? என்பது மே 2ம் தேதி தெரிய வந்துவிடும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பம்பரமாக சுழன்றுக் கொண்டிருந்த அரசியல் கட்சிகள், களத்தில் இறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தன. அச்சமயம் அதிமுக – திமுக இடையே வழக்கமான மோதல் வெடித்தது.

ஆபாசப்பேச்சு.. திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!

ஆளும் கட்சியினரை விமர்சித்து எதிர்க்கட்சியினரும் எதிர்க்கட்சியினரை விமர்சித்து ஆளும் கட்சியினரும் கடுமையாக சாடினார். சில பிரச்சாரங்கள் எல்லை மீறி சென்று விட்டது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக ஆளும் கட்சியினரை விமர்சித்து திமுகவின் முக்கிய புள்ளிகள் பேசியது சர்ச்சையை கிளப்பியது. திமுக எம்.பி ஆ.ராசா முதல்வர் குறித்து அவதூராக பேசியதும் எம்.பி தயாநிதிமாறன் ஜெயலலிதா மோடி உறவு பற்றி பேசியதும் சர்ச்சைக்குள்ளானது. இந்த லிஸ்டில், கே.என்.நேருவும் சேர்க்கப்பட்டார்.

அண்மையில் அவர் வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் அவர் ஆபாசமாக பேசியதாக தேர்தல் அதிகாரிகள் புகாரளித்தனர். அந்த புகாரின் பேரில் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நாளை நடக்கவிருக்கும் சூழலில் அடுத்தடுத்து திமுக பிரமுகர்கள் சர்ச்சையில் சிக்குவது திமுக தலைமையை அதிருப்தி அடையச் செய்துள்ளது.