திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது வழக்குப்பதிவு!
Sep 29, 2020, 09:16 IST1601351188000
வேலூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் திமுக சார்பில் நேற்று மாவட்டம் தோறும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் திமுகவின் தோழமை கட்சிகள்
கலந்து கொண்டன.
அந்த வகையில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் பங்கேற்றார். கொரோனா விதிமுறைகளை மீறியதாக துரைமுருகன் உள்பட 2 ஆயிரம் பேர் மீது வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.