அதிவேகமாக காரை ஓட்டி… உயிரிழப்பை ஏற்படுத்திய நடிகை யாஷிகா; போலீஸ் வழக்குப்பதிவு!

 

அதிவேகமாக காரை ஓட்டி… உயிரிழப்பை ஏற்படுத்திய நடிகை யாஷிகா; போலீஸ் வழக்குப்பதிவு!

மாமல்லபுரம் அருகே அதிவேகமாக காரை விபத்தை ஏற்படுத்தியதாக நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிவேகமாக காரை ஓட்டி… உயிரிழப்பை ஏற்படுத்திய நடிகை யாஷிகா; போலீஸ் வழக்குப்பதிவு!

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தற்போது பல படங்களில் நடித்து வருவதோடு ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். இவர் நேற்று இரவு கிழக்கு கடற்கரை சாலையில் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். மாமல்லபுரம் சூளேரிக்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி (28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதிவேகமாக காரை ஓட்டி… உயிரிழப்பை ஏற்படுத்திய நடிகை யாஷிகா; போலீஸ் வழக்குப்பதிவு!

படுகாயமடைந்த யாஷிகாவும் அவருடைய நண்பர்கள் இரண்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டியதால் விபத்து நேர்ந்ததாக தெரிய வந்துள்ள நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிவேகமாக கார் ஓட்டி உயிர் இழப்பை ஏற்படுத்தியதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.