நகராட்சி ஆணையரை செருப்பால் அடித்த பாஜக பெண் கவுன்சிலர்!

 

நகராட்சி ஆணையரை செருப்பால் அடித்த பாஜக பெண் கவுன்சிலர்!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகராட்சிக்கூட்டத்தில், நகராட்சி ஆணையரை பாஜக பெண் கவுன்சிலர் காலணியால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரா நகராட்சிக்கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் தீபிகா ராணி சிங், தனது வார்டில் எந்த பணியும் நடக்கவில்லை என்றும், வார்டில் நடந்த பணிகள் குறித்த பட்டியலை தர பொறியாளர்களை வரவைக்குமாறும் கூறியுள்ளார். அப்போது அவரது கைகளை பிடித்து அமர வைக்க முயன்றதால் இதனால் கோபமடைந்த அவர், நகராட்சி ஆணையரை காலணியால் தாக்கியுள்ளார். தடுக்க வந்த அவரது உதவியாளரையும் தீபிகா ராணி காலணியால் தாக்கினார். இச்சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் நகராட்சி ஆணையர் புகார் அளித்துள்ளார்.

நகராட்சி ஆணையரை செருப்பால் அடித்த பாஜக பெண் கவுன்சிலர்!

இதுதொடர்பாக பாஜக கவுன்சிலர் தீபிகா ராணி சிங் மற்றும் அவரது கணவர் புஷ்பேந்திர சிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 332, 353, 323 மற்றும் 504 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.