சென்னையில் தடையை மீறிச் சென்ற கார்கள்.. அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்!

 

சென்னையில் தடையை மீறிச் சென்ற கார்கள்.. அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்!

சென்னையில் கொரோனா பாதிப்பு 47 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்தும், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக கொரோனா பரிசோதனை, மக்களுக்கு விழிப்புணர்வு, மருத்துவ முகாம்கள் எனப் பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மக்கள் வேறு மாவட்டங்களுக்குச் செல்லாத வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் தடையை மீறிச் சென்ற கார்கள்.. அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்!

சென்னையில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், தடையை மீறி இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டும் பறிமுதல் செய்யப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில், சென்னை அண்ணாநகர் பகுதியில் தடையை மீறி வந்த நூற்றுக் கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.