கல்லட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து – தம்பதி பலி!

 

கல்லட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து – தம்பதி பலி!

நீலகிரி

உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் சாத்தூரை சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் பஷீர் அமகது. இவரது மனைவி பீபிஜான்(48). இவர்கள் நீலகிரி மாவட்டம் மாயார் பகுதியில் உள்ள மகளை பார்ப்பதற்காக சாத்தூரில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தனர். உதகை – கல்லட்டி மலைப்பாதையில் சென்றபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 22-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து, 23-வது வளைவில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

கல்லட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து – தம்பதி பலி!

இந்த விபத்தில், பஷீர் மற்றும் பீபிஜான் இருவரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் கார்த்தி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்த புதுமந்து காவல் நிலைய போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து கார் ஓட்டுநர் கார்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லட்டி மலைப்பாதையில் வெளியூர் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனையும் மீறி ஓட்டுநர் காரை ஓட்டிச்சென்றதால் விபத்து நேரிட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.