திடீரென தீப்பற்றி எரிந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 3 பேர்!

 

திடீரென தீப்பற்றி எரிந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 3 பேர்!

திருச்சி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 3 பேர் உயிர் பிழைத்தனர்.

திருச்சி கொட்டப்பட்டு அருகே இருக்கும் மொராய்ஸ் கார்டன் பகுதியில் வசித்து வரும் தம்பதி குழந்தைவேலு- மாலதி. இவர்களுக்கு ஸ்ரீ வர்ஷன் என்னும் மகன் இருக்கிறார். இந்த நிலையில் அவர்கள் நேற்று மாலை துணி வாங்குவதற்காகக குடும்பத்துடன் ஈரோட்டிற்கு சென்றிருக்கின்றனர். பின்னர் நள்ளிரவு அவர்கள் மீண்டும் திருச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, கார் ஜீயபுரம் பழூர் கிராமம் அருகே பழுதடைந்து நின்றதோடு, என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியாகியுள்ளது.

திடீரென தீப்பற்றி எரிந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 3 பேர்!

இதனை அறிந்த குழந்தைவேலு உடனடியாக காரை நிறுத்திவிட்டு, கீழே இறங்கியுள்ளதைத் தொடர்ந்து மாலதியும் ஸ்ரீ வர்ஷனும் காரில் இருந்து வெளியே வந்துள்ளனர். அச்சமயம் பழுதடைந்திருந்த அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்த குழந்தைவேலு குடும்பத்தினர், காரில் இருந்து இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.