வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இன்றும், நாளையும் சிறப்பு முகாம்!

 

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இன்றும், நாளையும் சிறப்பு முகாம்!

கொரோனா அச்சுறுத்தல்களுக்கிடையே திட்டமிட்டப்படி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத்தேர்தல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்திய கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் திமுகவும், அதிமுகவும் தேர்தலை எதிர்கொள்ளவிருப்பது தான் இதற்கு காரணம்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இன்றும், நாளையும் சிறப்பு முகாம்!

தேர்தலில் அரியணை ஏறப்போவது யார் என்று ? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே வெகுவாக எழுந்துள்ளது. இது ஒரு புறமிருக்க தேர்தல் ஆணையமும், தனது பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கு 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் நாளையும் அந்த முகாம்கள் நடைபெறுகிறது. மேலும், டிசம்பர் 12, 13 தேதிகளிலும் முகாம்கள் நடக்கவிருக்கிறது.