சிந்தியான்னு சொல்வதற்கு பதில் வாய் தவறி சச்சின் பைலட்ன்னு சொல்லி விட்டேன்… மழுப்பிய காங்கிரஸ் தலைவர்

 

சிந்தியான்னு சொல்வதற்கு பதில் வாய் தவறி சச்சின் பைலட்ன்னு சொல்லி விட்டேன்… மழுப்பிய காங்கிரஸ் தலைவர்

காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் ஐக்கியமான ஜோதிராதித்ய சிந்தியா அண்மையில் டிவிட்டரில், என் முன்னாள் சகா சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டால் ஒரங்கட்ட மற்றும் துன்புறுத்தப்படுவதை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது என பதிவு செய்து இருந்தார். செய்தி நிறுவனம் ஒன்று சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பி.எல். பூனியாவிடம் பேட்டி எடுத்தது. அப்போது சிந்தியாவின் கருத்து குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறியதாவது:

சிந்தியான்னு சொல்வதற்கு பதில் வாய் தவறி சச்சின் பைலட்ன்னு சொல்லி விட்டேன்… மழுப்பிய காங்கிரஸ் தலைவர்

சச்சின் பைலட் தற்போது பா.ஜ.க.வில் உள்ளார். காங்கிரஸ் மீதான பா.ஜ.க.வின் அணுகுமுறை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். பா.ஜ.க.விடமிருந்து எங்களுக்கு எந்தவொரு சான்றிதழும் தேவை இல்லை. காங்கிரசில் ஒரு தலைவரும், தொண்டரும் மதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். சச்சின் பைலட் பா.ஜ.க.வில் இணையாத நிலையில் அவர் பா.ஜ.க.வில் உள்ளார் என பூனியா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிந்தியான்னு சொல்வதற்கு பதில் வாய் தவறி சச்சின் பைலட்ன்னு சொல்லி விட்டேன்… மழுப்பிய காங்கிரஸ் தலைவர்

இந்த செய்தி வெளியான அடுத்த சில நிமிடங்களில் பூனியா இது தொடர்பாக டிவிட்டரில் விளக்கம் அளித்தார். பூனியா டிவிட்டரில், சிந்தியா ஜி பற்றிதான் கேள்வி கேட்கப்பட்டது அந்த வீடியோவில் தெளிவாக உள்ளது. நான் சிந்தியா என்று சொல்வதற்கு பதில் வாய் தவறி சச்சின் பைலட் என கூறிவிட்டேன். தவறுக்கு வருத்தம் என பதிவு செய்து இருந்தார்.