”பண்டிகை காலத்தில் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குங்கள்”பிரதமர் மோடி வலியுறுத்தல்

 

”பண்டிகை காலத்தில் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குங்கள்”பிரதமர் மோடி வலியுறுத்தல்

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொருட்கள் வாங்கும் போது, உள்நாட்டில் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும்படி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

”பண்டிகை காலத்தில் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குங்கள்”பிரதமர் மோடி வலியுறுத்தல்

நாட்டு மக்களிடம் வானொலியில் ”மண் கீ பாத்” நிகழ்ச்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி இதை முன்வைத்து பேசினார். அப்போது மேலும் கூறிய அவர், ‘வோக்கல் ஃபார் லோக்கல்” என கூறி, உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். மேலும் காதி ஆடைகளுக்கு வெளிநாடுகளில் அதிகரித்து வரும் மவுசு குறித்தும் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் பல இடங்களில் சுய உதவிக்குழுக்களும், அமைப்புகளும் காதியால் முக கவசங்களை தயாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் ஜார்கண்டை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு ஒன்று, விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் மற்றும் பழங்களை பெற்று, ஆஜிவிகா என்ற செயலி மூலமாக மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து உள்ளதை குறிப்பிட்ட அவர், இவ்வாறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நுகர்வோர்களுக்கு பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய கூறி விவசாய உற்பத்தி அமைப்புகள் மற்றும் சுய உதவிக்குழுக்களை வலியுறுத்தினார்.

”பண்டிகை காலத்தில் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குங்கள்”பிரதமர் மோடி வலியுறுத்தல்
  • எஸ். முத்துக்குமார்