பணத்தை ஏமாற்றிய நண்பர்கள்… வேதனையில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை…

 

பணத்தை ஏமாற்றிய நண்பர்கள்… வேதனையில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை…

கோவை

கோவையில் நண்பர்கள் பணத்தை ஏமாற்றியதால் மனமுடைந்த ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை பீளமேடு எல்லை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (60). ரியல் எஸ்டேட் அதிபர். நண்பர்களுடன் இணைந்து தொழில் புரிந்து வந்த கண்ணன், அதில் பல லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்திருந்தார். இந்த நிலையில், அவரது நண்பர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடி உள்ளனர்.

பணத்தை ஏமாற்றிய நண்பர்கள்… வேதனையில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை…

இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டமடைந்த கண்ணன், கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில, நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர், மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, அவரது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் பீளமேடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.