ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை

 
ஹோலி

ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பங்கு வர்த்தகம் நடைபெறாது.

இந்திய பங்குச் சந்தைகளில் பொதுவாக திங்கள் முதல் வெள்ளி வரை பங்கு வர்த்தகம் நடைபெறும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நடைபெறாது. அதேசமயம் குடியரசு தினம், சுதந்திர தினம், தீபாவளி உள்ளிட்ட முக்கிய தினங்கள் வர்த்தக தினங்களில் வந்தால் அன்று பங்குச் சந்தைகள் செயல்படாது. 

விடுமுறை

அந்த வகையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று (மார்ச் 7)  பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் நடைபெறாது. நாளை வழக்கம் போல் பங்கு வர்த்தகம் நடைபெறும். இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை என்பதால் இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும்.